போர் நிறுத்தம்-இலங்கை அரசு நிபந்தனை
கொழும்பு: இலங்கையில் நடந்து போரை நிறுத்த வேண்டுமானால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை விடுதலை புலிகள் உடனடியாக வெளியேற்றி, அவர்களை அரசின் பாதுகாப்பு பகுதிக்குள் வர அனுமதி வேண்டும் என இலங்கை அரசு நிபந்தனை விதித்துள்ளது.
ஈழத்தில் போர் பகுதியில் சுமார் 1.9 லட்சம் அப்பாவி தமிழர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அவர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு பகுதிக்குள் நுழைய மறுத்து வருகின்றனர். இதற்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு பகுதிகளில் குண்டு வீசி தாக்கி வருவதே காரணம என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இலங்கை வந்த ஐநா மனித விவகார அமைப்பு இணை செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ், அப்பாவி மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஈழப் பகுதியில் உயிருக்கு போராடி வரும் தமிழர்களை காப்பாற்ற போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியனர். இதை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசுகள் இலங்கையிடம் போர் நிறுத்தும் குறித்து வலியுறுத்தியது.
இதனையடுத்து போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ளது. ஆனால் முக்கிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இலங்கை வெளியுறவுத் துறை செயலர் பாலிகக்காரா கூறுகையில்,
விடுதலை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை பாதுகாப்பு பகுதிக்கு செல்ல அனுமதி கொடுத்தால் தற்காலிகமாக போரை நிறுத்தத்துக்கு இலங்கை அரசு தயாராக இருக்கிறது. இதை நீங்கள் தற்காலிக போர் நிறுத்தம் என்று அழைத்தாலும் சரி, அல்லது ஏற்கனவே இலங்கை அரசு விடுதலைப்புலிகளுக்கு அளித்த 48 மணி நேர கெடுவாக எடுத்துக் கொண்டாலும் சரி.
ஆனால், விடுதலைப்புலிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை வெளியேற விடுவதில்லை என்பதுதான் பிரச்சினையே. அவர்களை விடுதலைப்புலிகள் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.
மேலும், விடுதலைப்புலிகள்தான் பாதுகாப்பு வளைய பகுதியில் இருந்தவாறு ராணுவத்தினரை நோக்கி தாக்குதல் நடத்துகிறார்கள். அப்போது எதிர் தாக்குதல் மட்டுமே நடத்தப்படுகிறது. மற்றபடி ராணுவம் வேண்டுமென்று தாக்குதல் நடத்துவதில்லை என்றார் பாலிகக்காரா.
ராணுவ தாக்குதல் குறைக்கப்பட்டுள்ளது...
இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில்,
சண்டை நடக்கும் பகுதியில் சீருடை அணியாத விடுதலைப்புலிகள் பொதுமக்களுடன் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறார்கள். அதனால் எதிர்தாக்குதல் நடத்தும்போது, பொதுமக்களில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை யாராலும் உறுதி செய்ய முடியாது.
எனினும், போரின்போது எந்த அப்பாவி மக்களும் பலியாகவோ, காயமடையவோ கூடாது என்று ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனால்தான் கடந்த சில வாரங்களாக ராணுவம் தனது நடவடிக்கையை மெதுவாக்கி கொண்டுள்ளது.
போர் பகுதியில் உணவு, மருந்து வினியோகத்தை விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயுதமாக நாங்கள் பயன்படுத்தவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதனால் தான் தற்போது ராணுவத்தினர் தங்களது தாக்குதல்களை குறைத்து கொண்டிருக்கிறார்கள்.
அனேகமாக, தீவிரவாத குழுவுக்கு உணவு வினியோகம் செய்யும் ஒரே நாடாக இலங்கைதான் இருக்கும் என்று கருதுகிறேன்என்றார் ராஜபக்சே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications