கரூர் தேமுதிக வேட்பாளரான விவசாயி
Subscribe to Oneindia Tamil

கரூர் பகுதியில் நூல் வியாபாரம் நடத்தி வருகிறார் ராமநாதன். இருப்பினும் விவசாயமே இவருக்கு பிரதான தொழில்.
தேமுதிக உருவானது முதல் அதில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
கொங்கு வேளாள கவுண்டர் பிரிவைச் சேர்ந்த இவர் பி.யூசி. படித்துள்ளார். கரூர் தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினகைளை, குறிப்பாக ஜவுளி தொழிலில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடப் போவதாக கூறுகிறார் ராமநாதன்.
கரூரில் திமுக சார்பில் இம்முறையும் கே.சி.பழனிச்சாமியே நிற்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் யார் நின்றாலும் கவலை இல்லை. நான் தேமுதிகவின் வேட்பாளர். எனவே மக்கள் ஆதரவு எனக்கு அமோகமாக கிடைக்கும். அதற்கு விஜயகாந்த்தின் செல்வாக்கும், சொல்வாக்கும் உறுதுணையாக இருக்கும் என்று அபார நம்பிக்கையுடன் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications