செக்ஸ் தொல்லை-பீரில் விஷம்-கள்ளக்காதலன் கொலை
திருச்சி: திருச்சி அருகே செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்த கள்ளக் காதலனை அவரது காதலி பீரில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கேகே நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (65) மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வீரம்மாள் (60) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இவருக்கும் கணவரை பிரிந்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியில் மகன்களுடன் வசித்து வரும் சகுந்தலா (33) என்பவரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
சுந்தரமூர்த்தி தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கடி இரவு, பகல பாராமல் சகுந்தலாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் வெறுத்து போன சகுந்தலா, சுந்தரமூர்த்திக்கு விஷம் கொடுத்து அவரது கை, கால்களை செயலிழக்க செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக சோமரசம்பேட்டை அருகே கோப்பு கிராமத்தில் உள்ள சித்த மருத்துவர் சந்திரசேகர் என்பவரை சந்தித்து கை, கால்களை முடக்க மருந்து கேட்டுள்ளார்.
அவர் துத்தநாகம் கலந்த பொடி ஒன்றை சகுந்தலாவிடம் கொடுத்துள்ளார்.
இதையறியாத சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் இரவு சகுந்தலாவின் வீட்டிற்கு வந்து அவரை தன்னுடன் வெளியில் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு சம்மதித்த சகுந்தலா துத்தநாக பொடியை மறைத்து எடுத்து சென்றுள்ளார்.
சகுந்தலாவுடன் மோட்டார்பைக்கில் செங்குறிச்சி அருகே உள்ள சிறிய பாலத்திற்கு வந்த சுந்தரமூர்த்தி வண்டியை அங்கே நிறுத்திவிட்டு தான் வாங்கி வைத்திருந்த பீர் பாட்டில், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை சாப்பிட ஆரம்பித்தார். இது தான் சரியான சமயம் என கருதிய சகுந்தலா அவருக்கு தெரியாமல் அந்த துத்தநாக பவுடரை பீரில் கலந்தார்.
விஷம் கலந்த பீரை குடித்த சுந்தரமூர்த்தி வாயில் நுரை பொங்க, சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீஸ் பிரேத கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உண்மையை கண்டுபிடித்த போலீசார் சகுந்தலா மற்றும் டாக்டர் சந்திரசகர் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications