மயிலாடுதுறை தேமுதிக வேட்பாளர்-அரிசி ஆலை ஆதிபர்
Subscribe to Oneindia Tamil

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜி.கே.பாண்டியன். 38 வயதாகும் இவர் பி.எஸ்.சி படித்தவர்.
தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணித் துணைச் செயலாளராக இருக்கிறார்.
முதன்மைத் தொழில் அரிசி ஆலை. கூடவே செங்கல் சூளையும் வைத்துள்ளார்.
சுறுசுறுப்பாக பிரசாரத்தை ஆரம்பித்துள்ள பாண்டியன், கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் சட்டசபைக்குள் நுழைந்த தேமுதிக வருகிற தேர்தல் மூலம் நாட்டையே தன் பக்கம் ஈர்க்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
காங்கிரஸின் கோட்டையாக கருதப்படுவது மயிலாடுதுறை. ஆயிரம் இருந்தாலும் மாயூரம் ஆகாது என்பார்கள். அப்படிப்பட்ட பெருமை மிக தொகுதியில் ஜாம்பவான் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் பாண்டியன், மாயூரத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications