லிபிய படகு மூழ்கி 21 பலி, 232 பேரை காணவில்லை
திரிபோலி: லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து 253 பேரை ஏற்றி கொண்டு, இத்தாலி நோக்கி சென்ற படகு கடலில் மூழ்கியது. இதில் 21 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு்ள்ளன. மற்றவர்களின் நிலைமே என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக குடியேற விரும்புபவர்கள் நேரடியாக செல்லும் இடம் லிபிய தலைநகர் திரிபோலி தான்.
இங்குள்ள கடத்தல் படகு சொந்தக்காரர்கள் பணத்தை வாங்கி கொண்டு ஆப்பிரிக்கர்களை இத்தாலியில் இறக்கிவிடுவதை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் திரிபோலி வழியாக இத்தாலிக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 37,000 என்கிறது இத்தாலி அரசு. இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட லிபிய அரசுடன் இத்தாலி கடந்தாண்டு ஆகஸ்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதையடுத்து லிபியாவில் சட்டவிரோதமாக இத்தாலிக்கு செல்வதற்கு கடும் கெடுபிடி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் திரிபோலிக்கு அருகில் இருக்கும் சிடி பிலால் என்னும் இடத்தில் இருந்து இத்தாலிக்கு 250 பேரை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற மீன்பிடி கப்பல் கடலில் மூழ்கியது.
லிபிய கடலோர பாதுகாப்பு படையினர் இதுவரை 21 சடலங்களை கைப்பற்றியுள்ளனர். மற்ற 232 பேர்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை.
இதேபோல் 23 பேரை ஏற்றி கொண்டு சென்ற மற்றொரு படகும் அங்கு கடலில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த 23 பேரும் லிபிய கடலோர பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.
இது குறித்து லிபிய அதிகாரி ஒருவர் கூறுகையில், படகில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. இந்த விபத்தில் இறந்தவர்களில் 10 பேர் எகிப்தை சேர்ந்தவர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications