திருப்பூரில் நடிகர் கார்த்திக் போட்டி?

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் மே 13ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு அடுத்து 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய புதிய திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இந் நிலையில் திருப்பூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளை நடிகர் கார்த்திக், சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் இந்த தொகுதியில் கார்த்திக் போட்டியிடலாம் என்று அக் கட்சியினர் கூறுகின்றனர்.
கார்த்திக்கு முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தென் மாவட்டங்களில் தான் செல்வாக்கு உள்ளது. அதனால் அவர் அங்கு தான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் திருப்பூரில் தனது கட்சி சார்பில் வேறு வேட்பாளரை நிறுத்தலாம் என்கிறார்கள்.
தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதிக்குத் தான் அதிமுக கூட்டணியில் மதிமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மோதிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் கொழிக்கும் திருப்பூர்...:
இத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு பணப் பஞ்சம் வருவதில்லை. தொழிற்சாலை அதிபர்களிடம் வசூலிக்கப்படும் பணம் தேர்தல் செலவுக்குப் போக கைக்கும் ஏராளமாக மிஞ்சும் என்பதால் இந்தத் தொகுதியில் வேட்பாளராக எல்லா கட்சிகளிலும் எப்போதும் போட்டா போட்டி தான்.












Click it and Unblock the Notifications