For Quick Alerts
For Daily Alerts
Just In
வேலூரில் வெயில் கொடுமை-100 டிகிரியை தொட்டது
வேலூர்: வேலூரில் கோடையின் உக்கிரம் அதிகரித்துள்ளது. நேற்று அங்கு வெயில் 100 டிகிரி அளவை தொட்டதால் மக்கள் வெக்கையால் அவதியுற்றனர்.
தமிழகத்தின் கோடையின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் சேலத்தில் 100 டிகிரி வெப்பம் நிலவியது.
இதை தெடாந்து நேற்று வேலூரில் 100 டிகிரி வெயில் பதிவாகியது. 100 டிகிரி வெப்பம் வேலூரில் சகஜம் என்பதால் வேலூருக்கு வெயிலூர் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.
வேலூர் மக்களுக்கு வெக்கையின் கொடுமை பழகிவிட்டது. ஆனால், வெளியூரில் இருந்து வேலூர் வழியாக செல்லும் பிரயாணிகள் மதியம் நேரத்தில் இந்த பகுதியை தாண்டி செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
ஏப்ரல் மாத துவக்கத்திலே வெயில் 100 டிகிரியை தொட்டிருப்பதால், மே மாதம், அக்னி நட்சத்திர காலத்தில் என்ன ஆகுமோ என வேலூர் மக்கள் பயந்து வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, April 2, 2009, 10:39 [IST]