லேசாக உயர்ந்த பணவீக்கம்!
டெல்லி: நாட்டின் மொத்த விலைக் குறியீட்டெண் கணக்குப்படி பணவீக்கம் லேசாக உயர்ந்துள்ளது.
மார்ச் 21-ம் தேதியுடன் முடிவடைந்த வார கணக்குப்படி பணவீக்க விகிதம் 0.31சதவிகிதமாக உள்ளது. உணவுப் பண்டங்கள், தேயிலை, வெல்லம், குளிர்பானங்கள், இறக்குமதியான சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை இக் கால கட்டத்தில் உயர்ந்ததால் பணவீக்க விகிதமும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அரவித்துள்ளது.
மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில், மார்ச் 14-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் எடுத்த கணக்குப்படி அதற்கு முந்தைய வாரத்தைவிட 0.27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 7.8 சதவிகிதமாக இருந்தது.
பழங்கள், காய்கறிகள், பார்லி, கச்சா பட்டு, நாட்டுச் சர்க்கரை, உப்பு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்திருக்கிறது. உலை எண்ணெய், ஜவுளி ரகங்கள், ஹேர்-ஆயில், உருக்குக் கம்பிகள், தகடுகள் ஆகியவற்றின் விலையிலும் லேசான சரிவு ஏற்பட்டது.
பவுன் விலை ரூ.96 குறைந்தது!
சென்னையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை பவுனுக்கு ரூ.96 வரை குறைந்து ரூ.11,264-க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் விலை ரூ. 1,408.












Click it and Unblock the Notifications