லஞ்சம்-நெல்லையில் 7 சோதனை சாவடிகள் அகற்றம்
நெல்லை: நெல்லையில் சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரை அடுத்து போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்டிருந்த 7 சோதனை சாவடிகளை அகற்ற உத்தரவிட்டார்.
நெல்லை மாநகரத்தில் மேலப்பாளையம், கருங்குலம், பாளை கேடிசி நகர், ரெட்டியார்புரம், விஎம் சத்திரம், டக்கரம்மால்புரம், பழைய பேட்டை, தழையூத்து ஆகிய பகுதிகளில் 7 சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த சோதனை சாவடிகள் வழியாக சென்று வரும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை ஒரு போலீஸ் ஏட்டு தலைமையில் 3 போலீசார் சோதனை நடத்துவர். இந்த சோதனை சாவடிகளில் பணியில் உள்ள போலீசார் அவ்வழியாக சென்று வரும் லாரிகள், தனியார் வாகனங்களை நிறுத்தி மாமூல் பெற்று வந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சிலர் தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஐஜி அலுவலகம் மற்றும் தென்மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் ஆகியோருக்கு புகார் அனுப்பினர். சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் புகார் அனுப்பினர்.
இதனையடுத்து சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் இதுகுறித்து விவரங்களை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா கேட்டறிந்தனர். இதையடுத்து அவர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 7 சோதனை சாவடிகளை அகற்ற உத்தரவிட்டார்.
சோதனை சாவடிகளில் பணியாற்றிய போலீசார் அந்த ஸ்டேஷன் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சோதனை சாவடிகளில் இருந்த நாற்காலிகள், மின்விளக்குகள் அகற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications