For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக எம்எல்ஏ தாக்கப்பட்ட வழக்கு-எஸ்பி ஆஜராக உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் எம்எல்ஏ சாமியை தாக்கி அவரது காரை உடைத்த போலீஸ் எஸ்பி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், நஷ்ட ஈடு கோரியும் தொடர்ந்த வழக்கில் எஸ்பி மனோரகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நீதி மன்றத்தில் ஆஜராக நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் இடைத் தேர்தலில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி மேலூர் எம்எல்ஏ சாமி உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மேலூர் அதிமுக எம்எல்ஏ சாமி, மதுரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,

திருமங்கலம் இடைத் தேர்தலில் நான் எனது ஆதரவாளர்களுடன் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து விட்டு திரும்பி வரும் போது மதுரை எஸ்பி மனோகரன், டிஎஸ்பி ஷாஜகான், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், கூடக்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பிரபா ஆகியோர் கூட்டாக சேர்ந்து என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் வேண்டும் என்றே தாக்குல் நடத்தினர்.

மேலும் ரூ 25 லட்சம் பொருமானமுள்ள எனது காரை அடித்து உடைத்து விட்டனர்.

இதற்கு காரணமான மதுரை எஸ்பி மனோகரன் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தாக்குதலில் நொறுக்கப்பட்ட காருக்கு நஷ்டஈடு வழங்க வேணடும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி வரும் 9ம் தேதி எஸ்பி மனோரன் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X