காங்கிரசிடம் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்!
சென்னை: இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கடுமையாக தாக்கிப் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகளுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் கட்சி குறித்தும் மத்திய அரசு குறித்தும் இலங்கைப் பிரச்னை தொடர்பாகத் தாக்கிப் பேசியதற்காக திருமாவளவன், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததார்.
அந்த சம்பவங்களை மறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்டோம். அந்த கட்சி எங்களுடன் கூட்டணியில் உள்ளது. எனவே, அவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது.
கூட்டணியில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை. திருமாவளவனை கூட்டணியில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற நாங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவோம் என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications