திருச்சி அருகே வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியை அடுத்த மணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 20 ஆடுகள் பரிதாபமாக பலியாகின.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே உள்ளது சா. அய்யம்பாளையம். இந்த பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தோடு, தங்களது வாழ்வாதாரத்திற்கு ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பகுதியில் சுற்றித் திரியும் ஒரு வெறி நாய் தினமும் ஒரு ஆட்டை கடித்து கொன்று தின்று வருகின்றது.
இதனால் வேதனை அடைந்த ஆடு வளர்ப்போர் அந்த வெறி நாயை தேடி இரவு முழுவதும் கிராமத்தை சுற்றி வருகின்றனர். ஆனால் அந்த வெறி நாய் கிடைத்தபாடு இல்லை.
இது வரை வெறி நாய் கடிக்கு சுமார் 20 -க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறி நாய் கடிக்கு பலியாகியுள்ளது என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications