400 விடுதலைப் புலிகள் பலி -புதுக்குடியிருப்பு பிடிபட்டது: ராணுவம்

புதுக்குடியிருப்பு நகரைப் பிடித்து விட்டதாக முன்பே 2 முறை கூறியிருந்தது இலங்கை ராணுவம். பின்னர் அந்தக் கருத்திலிருந்து பின்வாங்கியது.
இந்த நிலையில் தற்போது புலிகளுடனான போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகவும், புதுக்குடியிருப்பு தங்களது முழுப் பொறுப்பின் கீழ் வந்து விட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
நேற்று இரவு அங்கு நடந்த கடும் சண்டையில், புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களான தீபன், நாகேஷ், கடாபி, விதுஷா, துர்கா, கமலினி உள்ளிட்ட 400க்கும மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்பை தங்களது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்ட ராணுவத்தின் 53, 58 படைப் பிரிவுகள் தற்போது அங்கு கடும் சண்டையில் இறங்கியிருப்பதாகவும் ராணுவம் கூறுகிறது.
இங்கு நடந்த சண்டையில் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பானு படுகாயமடைந்திருப்பதாகவும், இதை விடுதலைப் புலிகளின் தொலைபேசி பேச்சை இடைமறித்துக் கேட்டபோது உறுதியானதாகவும் ராணுவம் கூறுகிறது.
இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications