Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதட்டமான 5000 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் பதட்டமான 5000 வாக்குச் சாவடிளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை எஸ்பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தென்மண்டல ஐஜி சஞ்சீவ் குமார், நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, நெல்லை எஸ்பி ஆஸ்ரா கார்க், கன்னியாகுமரி எஸ்பி கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி எஸ்பி தீபக் தாமோர், மாநகர துணை கமிஷனர் ஜெயசந்திரன், தனிபபிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஏடிஜிபி ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வாக்கு சாவடிகளை காட்டிலும் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக அளிக்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் பயன்படுத்தப்பட உள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரவுடிகள் லிஸ்ட் தாயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

வேட்பாளர்களுடன் பிரசாரத்தில் கலந்து கொள்ளும் வாகனங்களின் விவரங்களை போலீசார் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்பர். சுவர்களில் வரையப்பட்டுள்ள தேர்தல் சின்னங்களை போலீசார் அழித்து வருகின்றனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+