பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையில் வாக்களிக்கலாம் - கரூர் கலெக்டர்
கரூர்: தேர்தலில் பார்வையற்றவர்கள், ஊனமுற்றவர்கள் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்படும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குபப்திவு இயந்திரம் செயல்பாடுகள் குறித்த விழுப்புணர்வு முகாம் நடைபெற்றது. கரூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி துவக்கி வைத்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேர்தலில் வாக்களிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்படும். அங்கு வாக்குபதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களுக்கு விளக்கப்படும்.
அனைத்து வாக்கு சாவடிகளிலும் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் பிரெய்லி முறையில் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட உள்ளது.
அதே போன்று ஊனமுற்றவர்கள் வாக்கு பதிவு செய்ய வாக்கு சாவடிகளில் அவர்கள் செல்ல வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட உள்ளது என்றார் கலெக்டர் உமா.