கே.சி.பழனிச்சாமி மீண்டும் கரூரில் போட்டி
பத்தாவது வரை மட்டுமே படித்தவர் கே.சி.பழனிச்சாமி. இருப்பினும் கரூரின் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் கம்யூன்டாக இருந்தவர் பழனிச்சாமி. 1986 முதல் 91 வரை கரூர் நகராட்சி துணைத் தலைவராக இருந்துள்ளார்.
1989 மற்றும் 1999 ஆகிய லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.
இருப்பினும் கடந்த தேர்தலில் கரூரில் போட்டியிட்டு திமுக சார்பில் எம்.பி. ஆனவர். இந்த முறையும் அங்கேயே போட்டியிடுகிறார்.
தனக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையி்ல் ஏற்கனவே அங்கு பூர்வாங்க வேலைகளைச் செய்து விட்டவர் கே.சி.பழனிச்சாமி.
தனது தொகுதியில் பஸ் வராத பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் இலவசமாக பஸ் விட்டு வரும் வித்தியாசமான அரசியல்வாதி. பெரும் செல்வந்தர் என்றாலும் ஆரம்பத்தில் இவர் ஒரு கம்யூனி்ஸ்ட். இதனால் மக்கள் பிரச்சனைகளை உணர்ந்து கொள்பவர், தீர்க்க முயல்வபர் என்ற பெயர் உண்டு.