குமரியில் மீண்டும் போட்டியிடும் பெல்லார்மின்

நாகர்கோவில் தொகுதியின் தற்போதைய எம்.பி பெல்லார்மின். மறுபடியும் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
தந்தை பெயர் வஸ்தியான், தாயார் மரிய தெரசாள். கன்னியாகுமரி மாவட்டம் மண்குழி கிராமத்தைச் சேர்ந்தவர். மனைவி பெயர் அன்புச் செல்வி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
படித்தது எம்.ஏ., பிஜிஎல். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தார். முழு நேர அரசியல்வாதி, சமூக சேவகர்.
2004ம் ஆண்டு முதல் முறையாக நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். தொழிலாளர்கள், நலிவடைந்த பிரிவினருக்காக போராடுபவர்.
நாகர்கோவில் தொகுதி எம்.பியாக இவரது செயல்பாடு குறித்து பெரிய அளவில் தொகுதியில் அதிருப்தி இல்லை. இருப்பினும் கடந்த தேர்தலில் அளித்த சில வாக்குறுதிளை பெல்லார்மின் நிறைவேற்றத் தவறி விட்டதாக தொகுதிக்குள் முனுமுனுப்புகள் உள்ளன.
கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் அக்கட்சியே போட்டியிடுகிறது. திமுக சார்பில் ஹெலன் டேவிட்சன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
திமுக மீது உள்ளூர் காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தியில் இருக்கிறது. அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications