போதையில் ரயிலை கவிழ்த்த டிரைவர் சஸ்பென்ட்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்த சிறப்பு ரயில் ஆயத்தப் பணியின்போது டிரைவரின் குடிபோதை காரணமாக கவிழ்ந்தது. இதையடுத்து அந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கடந்த 3ம் தேதி இரவு கோவையிலிருந்து சென்னைக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது 19 பெட்டிகள் அந்த ரயிலில் இணைக்கப்ப்டடு, இரண்டாவது பிளாட்பாரத்தில் வண்டியை நிறுத்த ஷன்டிங் பணி நடந்தது.

டிரைவர் பழனி என்பவர் ஷன்டிங் பணியை செய்வதற்கு வண்டியை கிளப்பினார். அப்போது அவர் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் இருந்ததால் ஷன்டிங் பணிக்காக அமைக்கப்பட்ட குறுகிய தண்டவாளத்தை தாண்டி வண்டியை வேகமாக ஓட்டியுள்ளார்.

இதில் ரயில் அருகில் இருந்த மணல் மேட்டில் மோதியது. என்ஜின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஒரு பெட்டி முற்றிலுமாக சேதமடைந்தது. அப்பகுதியில் ரயில்வே பணிகளுக்காக மணல் போடப்பட்டிருந்தால் ரயில் அருகில் இருந்த வீடுகளுக்குள் புகாமல் உயிர் பலியை தடுக்க முடிந்துள்ளது.

இந்த விபத்துக்கு காரணமான அந்த டிரைவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். என்ஜினை மீட்க ஈரோட்டில் இருந்து ராஜாளி என்ற கிரேன் கொண்டு வரப்பட்டது. ஆனால், கவிழ்ந்த என்ஜின் இரட்டை ரயில் என்ஜின் என்பதால் மீட்பு பணிக்கு இரண்டு கிரேன் தேவை என கூறப்பட்டது. இதையடுத்து மதுரையிலிருந்து பாண்டியன் என்ற கிரேன் நேற்று காலை கோவை வந்து சேர்ந்தது.

இந்த இரண்டு கிரேன்களும் சேர்ந்து என்ஜினை தூக்கி நிறுத்தின. அந்த என்ஜின் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே என்ஜின் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு ரிப்பேர் பணிகள் முடித்த பி்ன்னர் அந்த என்ஜின் பணிக்கு திரும்பும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+