கரூர் மதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்
கரூர்: கரூர் மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மொஞ்சனூர் ராமசாமி கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இருந்து வைகோ வெளியே வந்து மதிமுகவை துவங்கிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் மொஞ்சனூர் ராமசாமி. இதனால் அவருக்கு கரூர் மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மதிமுகவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாக மொஞ்சனூர் ராமசாமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால், அவர் மீது வைகோ வைத்திருந்த பாசம் காரணமாக கடந்த ஒன்றறை ஆண்டுகளாக கரூர் பகுதி மதிமுகவினர் மாவட்ட செயலாளர் இல்லாமல் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கரூர் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன், மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கேஎன் நேரு ஆகியோர் முன்னிலையில் மொஞ்சனூர் இராமசாமி இன்று திமுகவில் இணைந்தார்.