இலங்கை: நார்வே அமைச்சருடன் ஹில்லாரி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஹில்லாரி கூறுகையில், எங்களது பேச்சின்போது பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இலங்கை பிரச்சினை குறித்தும் விவாதித்தோம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ரத்தக்களரிக்கு முடிவு கட்ட நார்வே எடுத்து வரும் அயராத முயற்சிகள் குறித்து விவாதித்தோம்.
இதுதவிர ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, புவி தட்பவெப்ப மாற்றம் குறித்தும் விவாதித்தோம் என்றார்.
2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட நார்வே உதவியது. இருப்பினும், பின்னர் இந்த ஒப்பந்தத்தையும், போர் நிறுத்தத்தையும் இலங்கை அரசு கிடப்பில் போட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications