மதிமுகவுக்கு இன்றே கடைசி சான்ஸ்!

நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தூதராக இந்திய கம்யூனிஸிட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சந்தித்துப் பேசிய பின்னர் மதிமுக கேட்ட விருதுநகர், தஞ்சாவூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளை ஒதுக்க ஜெயலலிதா முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொகுதிகள் கிடைத்தால் விருதுநகரில் வைகோ, தஞ்சையில் ஜெயபாரதி விஸ்வநாதன், ஈரோட்டில் கணேச மூர்த்தி, திருவள்ளூரில் மல்லை சத்யா ஆகியோர் போட்டியிடலாம்.
அதே நேரத்தில் வைகோ கேட்கும் 5வது தொகுதியான காஞ்சிபுரம் தரப்படாது என்று தெரிகிறது. இங்கு சசிகலாவின் அக்காள் மகனும் இப்போது போயஸ் கார்டனில் கொடி கட்டிப் பறப்பவருமான டாக்டர் வெங்கடேஷ் தனக்கு மிக வேண்டிய ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளாராம்.
இதனால் தான் கேட்ட 4 தொகுதிகள் கிடைக்கும் ஆறுதலுடன் கூடுதல் சீட் கேட்பதை வைகோ கைவிட்டால் உடன்பாடு ஏற்படும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
அதிமுக-மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்படாவிட்டால் நாளை தமிழகத்தில் பரபரப்பான பல அரசியல் திருப்பம் ஏற்படலாம்.
இந் நிலையில் இன்று மாலை கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார் வைகோ. மேலும் நாளை மதிமுக பொதுக் குழுக் கூட்டமும் சென்னையில் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications