சிலை திருட்டு: ஜெயந்திரர் மீது குற்றமில்லை-போலீசார்
மன்னார்குடி : காஞ்சி ஜெயந்திரர் மீது சுமத்தப்பட்ட சிலை திருட்டு புகாரில் உண்மையில்லை என்பதால், இந்த வழக்கை மேலும் விசாரிக்க தேவையில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ளது பெரியகுடி. இங்கு புகழ் பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 2005ம் ஆண்டு காஞ்சி ஜெயந்திரர் சுவாமிகள் வருகை தந்தார்.
அப்போது அந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சிலை மற்றும் நவரத்தின கற்கள் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மன்னார்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சி ஜெயந்திரர் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை தொடர்ந்து மேலும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் போலீசார் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதி மன்றத்தில் கோட்டூர் போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மன அளித்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கோட்டூர் போலீசார் 6 மாத காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசார் இரு தரப்பையும் வரவழைத்து விசாரணை நடத்தியதில், சுரேஷ் கொடுத்த புகாரில் உண்மை இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் விசாரணை தேவையில்லை என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை போலீசார் சுரேஷிடம் கொடுத்தனர். ஆனால் அவர் வாங்க மறுத்து விட்டார். இதனையடுத்து அந்த அறிவிப்பு நோட்டீசை சுரேஷ் வீட்டில் போலீசார் ஒட்டினர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications