விமரிசையாய் நடந்த மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் திருப்பணி நடந்தது.
ரூ.12 கோடி செல்வில் கோவில் கோபுரங்கள், சன்னதிகள், பிரகாரங்கள், மண்டபங்கள், சிற்பங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த மாதம் 26ம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. 2ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக வடக்கு ஆடி வீதியில் 180 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டது.
நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜை நடந்துத. நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் அக்னி வளர்த்து மந்திரங்கள் ஓதினர்.
கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர், கூடல் குமரர், வன்னி மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, நவக்கிரகங்கள், பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள் ஆகிய சுவாமி சிலைகளுக்கு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நேற்று காலை யாகசாலை பூஜை நடந்தது. இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இருந்து விசேஷ சாந்தி பூஜை நடத்தி சிவாச்சாரியார்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் யாகசாலையில் விநாயகர் பூஜை, புண்ணியவாகன பூஜை, பஞ்சகவ்ய பூஜை, சூரியபூஜை, பிரதான கும்ப பூஜை போன்ற பூஜைகளை நடத்தினர். பின்னர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டது.
இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் 4 ராஜகோபுரங்கள் உள்பட 12 கோபுரங்களுக்கு எடுத்துச் சென்று கலசங்களுக்கு பூஜை நடத்தினர்.
அதை தெடார்ந்து 9.17க்கு மீனாட்சி அம்மனுக்கு மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்கள் மீது ஏழு நதிகளின் புண்ணிய தீர்த்தங்கள தெளிக்கப்பட்டது. பின்னர் அது பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.
இதன் பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகம் காரணமாக மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த 26ம் தேதி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாக சாலை பூஜைகளில் பங்கெடுத்து வந்தனர்.
இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் கூடியுள்ளனர். இதையொட்டி மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications