இந்தியாவிலிருந்து யுஎஸ் திரும்பும் பிபிஓ 'சல்லே மே'!

தற்போதைய பொருளாதார மந்தச் சூழலில் அமெரிக்காவில் வேலையின்றித் தவிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இந்த முடிவை மேற்கொண்டதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கர்களுக்கு 2000 புதிய ஐடி மற்றும் கால்சென்டர் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் புனே, பெங்களூரு மற்றும் பிலிப்பைன்ஸில் பிபிஓ பணிகள் மற்றும் மாணவர்களுக்கு கடன் வசதி பெற்றுத் தருதல், பல்வேறு நிதி அமைப்புகளுக்கு பணத்தை வசூல் செய்தல் என பல பணிகளைச் செய்துவந்தது சல்லே மே. இதுவரை 1 கோடி மாணவர்களுக்கு 180 பில்லியன் டாலர்கள் வரை கடன் வாங்கித் தந்துள்ளது இந்த நிறுவனம்.
ஆனால் நிதி நெருக்கடி, பொருளாதார மந்தம் காரணமாக நிறுவனத்தின் செலவைக் குறைக்க, கடந்த 2008-ம் ஆண்டு தனது பல கிளைகளை மூடியது.
இப்போது, அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications