கூட்டணி: குழப்பியெடுக்கும் சரத், பாஜக, கார்த்திக்!
மதுரை: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கார்த்திக் கூட்டணி அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 தொகுதிகளில் தனது நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
பாஜகவுடன் புரிந்துணர்வு அடிப்படையில் நாங்கள் இந்த 7 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். எங்களது கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தொண்டர்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப வாக்களிக்கலாம்.
நாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
ஆனால், இந்தக் கூட்டணி குறித்து பாஜக தரப்பிலிருந்து எந்தத் தகவும் இல்லை. ராமநாதபுரத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலாளரான திருநாவுக்கரசர் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் கார்த்திக்கின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக்குடன் கூட்டணி அமைத்துலும் கூட ராமநாதபுரத்தை பாஜக விட்டுத் தருமா என்று தெரியவில்லை. இதனால் இந்தக் கூட்டணி குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.
சரத்குமாரின் குழப்பம்:
அதே போல நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற குழப்பமும் தீரவில்லை.
பாஜக, மனித நேய மக்கள் கட்சி என அரசியலில் இரு வேறு துருவங்களில் நிற்கும் கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருக்கிறார். அதே போல கார்த்திக்குடனும் பேசிப் பார்த்தார்.
இந் நிலையில் நாளை மறுநாள் (13ம் தேதி) சென்னையில் கூட்டணி பற்றிய அறிவிப்பையும் வேட்பாளர் பட்டியலையும் சரத்குமார் வெளியிடுகிறார் என்கிறார்கள்.
பாஜகவோ வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போகிறோம் என்பதோடு சரத்குமார், கார்த்திக்குடன் பேசி வருகிறோம் என்கிறது.












Click it and Unblock the Notifications