கரூவூரார் சன்னதி திருப்பணி 13ல் துவக்கம்
கரூர்: தமிழகத்தில் தோன்றிய 18 சித்தர்களில் ஒருவரான கரூவூரார் சித்தர் சன்னதியில் ரூ. 10 லட்சம் செலவில் வரும் 13ம் தேதி திருப்பணி துவக்கப்பட உள்ளது.
இது குறித்து கரூர் பசுபதீஸ்வர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் பழனியப்பன் கூறுகையில்,
தமிழகத்தில் தோன்றிய 18 சித்தர்களில் கரூவூராரும் ஒருவர். இவர் பண்டைய சோழ நாட்டின் கரூரில் பிறந்தவர். இவரது பெயரில் உள்ள கரூரில் இவருக்கு சன்னதி ஒன்று உள்ளது. இந்த சன்னதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கோயிலின் திருப்பணி வேலைகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் வரும் 13ம் தேதி காலை கரூர் பசுபதீஸ்வர் கோயிலில் உள்ள புகழ் சோழர் மண்டபத்தில் நடக்கிறது.
திருப்பணி வேலைகள் தொடங்குவதற்காக வரும் 13ம் தேதி காலை 4 மணி முதல் 6.30 மணிக்குள் பாலாயம் நிகழ்ச்சிக்கான முற்றோதல் நடைபெறும். மேலும் தனியாக கோசாலை கட்டப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications