'நிதி'- ஜெ. மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதி எங்கே போனது என்று கேட்டு முதல்வர் கருணாநிதிக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கள் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளதாகக் கூறி, இப்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் ஜெயலலிதா மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை நகர குற்றவியல் வழக்கறிஞர் ஷாஜகான் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications