அரசு தேர்வையும் விட்டு வைக்காத தேர்தல்
நெல்லை: தமிழ்நாடு அரசு குரூப் 1 தேர்வில் தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் வழக்கத்தை விட அதிகமாக கேட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நேற்று 32 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடந்தது. துணை கலெக்டர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல முக்கிய பணியிடங்களை நிரப்புவதற்கு இத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் மே 13ம் தேதி நடக்கவிருப்பதை அடுத்து தமிழகம தேர்தலுக்கு விறுவிறுவென தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையி்ல நேற்று நடந்த குரூப் 1 தேர்வி்லும் தேர்தலின் தாக்கத்தை காணமுடிந்தது. பொருத்துக பிரிவில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் சின்னம் எது என கேட்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் முதன்முதலாக அதிமுக வெற்றி பெற்ற தொகுதி, கடைசி பொது தேர்தலில் திமுக வெற்றி பெற்ற இடங்கள், 2000ம் ஆண்டில் தேர்தல் ஆணயைம் எந்த கட்சியின் அந்தஸ்தை நீக்கியது போன்ற கேள்விகள் தேர்வு எழுதியவர்களின் அரசியல் அறிவை கூர்தீட்டியது.
மேலும், தேசிய அரசியல் சார்ந்த சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. எதிர்பாராத இந்த கேள்விகள் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications