For Daily Alerts
Just In
இன்று முதல் மே 13 வரை கருத்து கணிப்புக்கு தடை
இதுகுறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் மே 13ம் தேதி வரை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கப்படவோ கூடாது.
இதுதொடர்பாக பிப்ரவரி 17ம் தேதியே உத்தரவிடப்பட்டு விட்டது. ஜனவரி 19ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் கடைசிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Tuesday, April 14, 2009, 17:20 [IST]