அதிமுக வேட்பாளர்கள் 20ம் தேதி ஒட்டுமொத்தமாக மனு தாக்கல்
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் 23 பேரும் வருகிற 20ம் தேதி மொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இதில் அதிமுக 23 தொகுதிகளிலும், பாமக 7, மதிமுக 4, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இதில் அதிமுக இரண்டு முறை வேட்பாளர்களை மாற்றியது.
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் அன்றும், 18ம் தேதியும் அஷ்டமி வருகிறது. 19ம் தேதி நவமி. எனவே 20ம் தேதி முதல்தான் வேட்பு மனு தாக்கலை வேட்பாளர்கள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப அதிமுக வேட்பாளர்கள் 23 பேரும் வருகிற 20ம் தேதி மொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
20ம் தேதி காலை 11.45 மணியில் இருந்து 12.15 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் செய்யுமாறு வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
ஏற்கனவே ஜாதகம் பார்த்துதான் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது மனுத்தாக்கலுக்கான நேரத்தையும் அதிமுக தலைமையே குறித்துக் கொடுத்துள்ளது.
வருகிற 16ம் தேதி அதிமுக பிரசாரம் தொடங்குகிறது. சென்னையில் இந்தப் பிரசார தொடக்க விழா கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து 18ம் தேதி முதல் ஜெயலலிதா தனது சூறாவளி சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.












Click it and Unblock the Notifications