வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்!
இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்தது. இதனால் கோடையின் வெப்பத்தில் இருந்து மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்தது.
இந் நிலையில் தமிழகத்துக்கு தென் கிழக்கே வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது புயல் சின்னமாக வலுப் பெற்று இன்று காலை விசாகப்பட்டினத்தின் தென் கிழக்கே நகர்ந்துள்ளது. இதனால் நாளை வடக்கு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.
முதலி்ல் வெப்பம் அதிகரித்து பின்னர் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த புயல் சின்னத்தால் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டது. நேற்று இந்த புயல் சின்னம் அந்தமான்-நிகோபார் தீவுகள் அருகே நிலை கொண்டிருந்ததால் அங்கு மிக பலத்த மழை பெய்தது.