நளினி, முருகன், 5 பேரை விடுவிக்கக் கோரி மனு
சென்னை: விடுதலை செய்யக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர்களது வழக்கறிர் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ல் மே மாதம் 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஜெயின் கமிஷன், விசாரணை நடத்தியது.
பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி, அறிவு ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
ஜெயின் கமிஷன் விசாரணை 1998-ல்தான் முடிந்தது. அதற்கு முன்பே 7 பேருக்கும் பூந்தமல்லி கோர்ட்டு தண்டனை விதித்து விட்டது.
ஜெயின் கமிஷன் அறிக்கையில் புகார் கூறப்பட்ட சந்திராசுவாமி, சுப்பிரமணியசாமி ஆகியோரை விட்டு விட்டார்கள். எனவே தண்டனை பெற்ற நளினி- முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்தக் கோரிக்கை குறித்து சிறைத்துறை மறு ஆய்வுக்குழு பரிசீலிக்குமாறு கூறி மனுவை பைசல் செய்தது உயர்நீதிமன்றம் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications