7 முனை போட்டியில் தென்காசி-கிருஷ்ணசாமியை எதிர்க்கும் பெரியப்பா மகன்
தென்காசி: தென்காசி தொகுதியில் ஏழு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமியை எதிர்த்து அவரது பெரியப்பா மகன் சமாஜ்வாடி கட்சி சார்பில் களம் இறங்குகிறார்.
தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் குறைந்தது 3 முனை அல்லது நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
எதிர்பாராத வகையில், பாஜக தலைமையில் ஒரு அணியும், புதிய தமிழகம் தலைமையில் இன்னொரு அணியும் உருவாகி வாக்காளர்களை பெரும் குழப்பத்தி்ல் ஆழ்த்தப் போகின்றன.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய நான்கு பெரிய கட்சிகள் மோதுகின்றன.
புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இங்கு போட்டியிடுகிறார். தற்போது அவரை எதிர்த்து அவரது பெரியப்பா மகன் ஜோதி ராஜ் களம் இறங்குகிறார். இவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
புதிய தமிழகம் கட்சியில் இருந்தவர்தான் ஜோதி ராஜ். அங்கு பல பொறுப்புளை வகித்துள்ளார். தற்போது அதிலிரு்நது விலகி சமாஜ்வாடியில் இணைந்து விட்டார்.
இவர்கள் தவிர பகுஜன் சமாஜ் கட்சியும் இங்கு போட்டியிடுகிறது. அதேபோல அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிடவுள்ளது.
எனவே இங்கு 7 முனைப் போட்டி ஏற்படப் போகிறது. இருப்பினும் காங்கிரஸ், சிபிஐ இடையேதான் முக்கியப் போட்டி நிலவும்.












Click it and Unblock the Notifications