For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ நடவடிக்கை: மேனன்-நாராயணனுடன் தொடர்பில் இருக்கிறோம்-இலங்கை

By Staff
Google Oneindia Tamil News

Gothabaya Rajapakshe
கொழும்பு: இலங்கை நிலவரம் குறித்து தினசரி எஸ்.எஸ்.மேனன் மற்றும் எம்.கே.நாராயணன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறேன். அவர்களும் என்னுடன் ரெகுலராக தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள் என்று ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரபாகரன் ஒன்று சரணடைய வேண்டும். அல்லது மடிய வேண்டும். சரணடைய அவர் முன்வந்தால் நல்லது. இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். எங்களை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று அவர் நினைத்தால், அவருக்கு மரணம்தான் ஏற்படும்.

அவர் சரணடைந்தால், எங்களது காவலில் வைத்து, முறைப்படி விசாரணை நடத்துவோம்.

டெல்லியுடன் தொடர்பு..

இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் அவ்வப்போது தொடர்ந்து டெல்லிக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். ராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் அவர்களுக்குத் தவறாமல் தெரிவிக்கிறோம்.

தினசரி எம்.கே.நாராயணன், எஸ்.எஸ்.மேனன் ஆகியோருக்கு நானே போன் செய்து நடந்து கொண்டிருப்பவற்றை தெரிவித்து வருகிறேன். எங்களுக்கும், மேனனுக்கும், நாராயணனுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது.

தொடர்ந்து அவர்களுடன் நான் பேசி வருகிறேன். அவர்களும் ஆர்வத்துடன் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கேட்டு வருகிறார்கள் என்று கூறியுள்ளார் கோதபாய ராஜபக்சே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X