போர் உச்சகட்டம்-வேதாரண்யம் வந்த 19 அகதிகள்
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்: இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதால் அங்கிருந்து 19 தமிழர்கள் தப்பி அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட தினசரி அகதிகள் வர ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை, ஒரு படகில், 8 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் 9 ஆண்கள் இலங்கையிலிருந்து தப்பி நாகை மாவட்டம் வேதாரண்யம் வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அனைவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் அங்குள்ள மீனவ கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு தாசில்தார், போலீஸார் விரைந்தனர். அகதிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு தகவல் சேகரித்தனர்.
விசாரணையின் முடிவில் அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications