மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் ரிலையன்ஸின் 50 புதிய சூப்பர் மால்கள்!
மும்பை: அடுத்த 5 ஆண்டுகளில் 50 சூப்பர் மார்க்கெட் கடைகளை துவங்குகிறது மார்க் அண்ட் ஸ்பென்ஸர்ஸ் ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம்.
ஆனால் வருவாயை விற்பனையாளரும் கடையை நிர்வகிப்பவரும் பகிர்ந்து கொள்ளும் புதிய முறையில் இந்தக் கடைகள் துவங்கப்பட உள்ளன.
இங்கிலாந்தின் மார்க் அண் ஸ்பென்சர் நிறுவனமும் இந்தியாவின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கூட்டாக உருவாக்கியுள்ள நிறுவனம்தான் மார்க் அண்ட் ஸ்பென்ஸர்ஸ் ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம். இதில் ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு 49 சதவிகித பங்குள்ளது.
இந்த புதிய வகை சில்லறை சூப்பர் மார்ரகெட்டுகள் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம். வெற்றிகரமாகவும் இயங்குகின்றன. ஆனால் இந்தியாவில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு தோல்வியடைந்த ஒரு மாடல்.
ஆனால் இந்த தடவை முழுமையாக வெற்றி பெறுவோம் என நம்புவதாக இந்த நிறுவனத்தின் சிஇஓ மார்க் அஷ்மான் தெரிவித்துள்ளார்.
கடையை மேம்படுத்துபவரே அதன் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விளம்பரங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வருகிற வருவாயில் குறிப்பிட்ட அளவு இருதரப்பும் பகிர்ந்து கொள்ளும். இந்த அடிப்படையில் 50 புதிய கிளைகளை ரூ.230 கோடி முதலீட்டில் துவங்கப் போகிறதாம் மார் அண்ட் ஸ்பென்ஸர் ரிலையன்ஸ் நிறுவனம்.
நிறுவனத்தின் சில்லறை வர்த்தக தலைவர்களாக மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களில் ஒருவர் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.












Click it and Unblock the Notifications