For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று நடந்த வன்னி தாக்குதலில் 287 தமிழர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

வன்னி: இலங்கை ராணுவம் நேற்று நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 287 தமிழர்கள் படுகொலையானார்கள்.

இலங்கையின் தாக்குதல் வெறி இன்னும் அடங்கவில்லை. தினசரி சராசரியாக 250 பேரைக் கொன்று குவித்து வருகிறது.

சர்வதேச அளவில் எந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்தாலும் அது சுத்தமாக மதிக்கவில்லை.

விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருககிறது

நேற்று புதுக்குடியிருப்பு இலங்கைப் படையினர் நடத்திய அகோரத் தாக்குதலில் 287 தமிழர்கள் படுகொலை செய்ய்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் கியூடெக் கரித்தாஸ் நிறுவன அதிகாரி அருட்திரு வசந்தசீலன் அடிகளார் கால் துண்டிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் தொடர்ந்த மரண ஓலமாகவே உள்ளது. காயமடைந்தவர்கள் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X