மனசாட்சியுடன் ஓட்டு போடுங்கள்-ஜெயலலிதா
மதுரை: மதுரை மக்களே, மனசாட்சியுடன் ஓட்டு போடுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பி்ல் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இந்த தினத்தை மதுரை மக்களால் மறக்க முடியுமா?. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி 1997ம் ஆண்டு இதே நாளில் வன்முறை கும்பலால் வெட்டப்பட்டு துடிக்க துடிக்க இறந்தார்.
மதுரை மக்களே, மனசாட்சியுடன் ஓட்டு போடுங்கள். லீலாவதியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க மோகனை வெற்றி பெற செய்யுங்கள்.
மதுரையில் வருகிற 9ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மிகப்பெரிய விழா நடக்கவுள்ளது. அந்த சமயத்தில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்த்துவிட திமுகவினர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அந்த கலவரத்துக்கு பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். கள்ள ஓட்டுக்களை போட்டு விடலாம் என்று ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர்.
முன்னால் முதல்வர் என்ற முறையில் காவல் துறையினருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். போலீசார் தங்கள் கடமையை செய்து திமுகவினரின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும். எக் காரணம் கொண்டும் வன்முறையை அனுமதிக்கக் கூடாது என்று போலீசாரை கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.