உடனே போரை நிறுத்துங்கள்-அமெரிக்கா கண்டிப்பு
வாஷிங்டன்: இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பலியாவது பெரும் கவலை தருகிறது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல் முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொல்வதை நிறுத்த வேண்டும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..
பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ந்து எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல விடாமல் சர்வதேச உதவி அமைப்புகளைத் தடுப்பது, பத்திரிகையாளர்களை செல்ல விடாமல் தடுப்பது ஆகியவற்றையும் இலங்கை அரசு கைவிட வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களை சந்திப்பதற்கு அனைத்து உதவி அமைப்புகளையும் இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
போரை நிறுத்தாவி்டால் அது இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர் அவலம் நீடித்தால், மறு சீரமைப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும். இரு தரப்பினரும் சண்டை போடுவதை கைவிட்டு விட்டு மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல உதவ வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்து நாடுகளுடனும் இணைந்து அமெரிக்கா பணியாற்ற விரும்புகிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது.
சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை இலங்கை அரசு மதிக்க வேண்டும். அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இவற்றை மீறும் வகையில் இலங்கை அரசு தொடர்ந்து நடந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications