இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டு சிறை!

Subscribe to Oneindia Tamil

Gopalakrishnan
சென்னை: இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சிபிஐ நீதிமன்றம்.

1993-ம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கித் தலைவராக இருந்தபோது, மும்பையைச் சேர்ந்த பிஜே என்ற பைப் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 8.86 கோடியை மும்பை கிளை மூலம் வழங்கப்பட்டது.

ஆனால் இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவதற்கு வங்கி கேட்ட குறைந்தபட்ச ஆவணங்களைக் கூட, பிஜே நிறுவனம் இந்தியன் வங்கியில் சமர்ப்பிக்கவில்லை.

பல வழக்குகளில் கோபால கிருஷ்ணன் சிக்கிக் கொண்டபோது, இந்த கடன் வழங்கலின் பின்னணியிலிருந்து மோசடி குறித்தும் சிபிஐ விசாரித்தது. சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கு நடந்தது. இன்று அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ரெங்கராஜன் வழங்கினார்.

போதிய ஆவணங்கள் இன்றி முறையற்று இந்தக் கடன் வழங்கப்பட கோபாலகிருஷ்ணன் முதன்மைக் காரணமாக இருந்துள்ளதால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.70 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தக் கடனை வழங்கிய அப்போதைய மும்பை கிளையின் மேலாளர் சண்முகராஜனுக்கும் 14 ஆண்டு தண்டனையும், ரூ. 80 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+