ஆந்திராவில் மறுவாக்குப் பதிவு 80 சதவீதம்!
ஹைதராபாத்: ஆந்திராவில் 63 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. இதில் 80 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 23ம் தேதி நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து ஆந்திரா தேர்தல் ஆணையாளர் 10 மாவட்டங்களில் உள்ள 63 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டார். நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
இது குறித்து ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி சுப்பா ராவ் கூறுகையில், மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. இத்துடன் ஆந்திராவில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
ஓட்டு எண்ணிக்கைக்கான நடவடிக்கைகள் இன்று முதல் துவக்கப்படும். மேற்பார்வையாளர்கள், கட்சிகளின் ஏஜென்ட்கள் ஆகியோர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளோம்.
பிரகாசம் மாவட்டம் கந்துகூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியது தொடர்பாக 11 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை உடனே கைது செய்யும்படி போலீஸ் அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளோம்.
ஒரு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் ஏஜென்ட்கள் வாக்காளர்களுக்கு பதிலாக வாக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் வாக்காளர்களிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என கேட்டது வீடியோவில் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தி்ல தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 63 இடங்களில் சராசரியாக 80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார் அவர்.
-
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
ஒரு சின்ன தவறு.. ஒரே இரவில் ஒட்டுமொத்த குடும்பமும் அழிஞ்சு போச்சு.. இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications