மக்களிடம் சிக்கிய காங். எம்எல்ஏவை மீட்ட திருமா!
அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த அரியலூர் எம்எல்ஏ அமரமூர்த்தியை மக்கள் சூழ்ந்து கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மக்களை சமாதானம் செய்து, எம்எல்ஏவை மீட்டார்.
திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அரியலூர் காங்கிரஸ் எம்எல்ஏ பாளை. அமரமூர்த்தி அரியலூர் தொகுதிக்கு உட்பட்ட எசனை பகுதிக்கு வந்தார்.
எம்எல்ஏவை கண்டதும் ஆவேசப்பட்ட பொது மக்கள் அவரை மறித்து, வெற்றி பெற்ற பின்பு நன்றி சொல்லக் கூட நீங்கள் வரவில்லை. இப்போது ஓட்டு கேட்க என்ன தைரியத்தில் இங்கு வந்தீர்கள் என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
இதையடுத்து அவருடன் வந்திருந்த விடுதலை சிறுத்தகைள் கட்சி நிர்வாகிளும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மக்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து திருமாவளவனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் தலையிட்டு பொது மக்களை சமாதானம் செய்தார். அதற்கு பின்பு தான் எம்எல்ஏவை அந்த இடத்தை விட்டு நகர மக்கள் அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications