போர் நிறுத்த அறிவிப்பு ஒரு மோசடி-இலங்கை எம்.பி
சென்னை: இலங்கை அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு மோசடி நடவடிக்கை. அங்கு தொடர்ந்து விமானத் தாக்குதல் நடந்து வருகிறது என்று அந் நாட்டு தமிழ் எம்பியான சிவாஜி லிங்கம் கூறினார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பியான சிவாஜி லிங்கம் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், இயந்திர தாக்குதலை நடத்த மாட்டோம், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்துள்ளன. ஆனால், அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே முள்ளிக்கால்வாய் பகுதியில் மக்கள் உள்ள இடங்களை பார்த்து 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியுள்ளன.
மேலும், பிற்பகலிலும் மற்றொரு விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் ராணுவ வீரர்கள் புகுந்து அங்குள்ள மக்களை பிடித்து சென்றுள்ளனர் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் இந்த போர் நிறுத்த அறிவிப்பு ஒரு மோசடிதான். இது உலக நாடுகளையும், தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட நாடகம். சர்வதேச நாடுகளும், பன்னாட்டு அமைப்புகளும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதற்காக விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதை கண்காணிக்க கண்காணிப்பு குழு ஒன்றை ஐ.நா. அமைக்க வேண்டும். அதில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இடம் பெற வேண்டும்.
முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். அவர் காங்கிரஸ் அரசுக்கு எதிராகத்தான் உண்ணாவிரதம் இருந்தார். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இலங்கை தமிழர்களை காப்பாற்ற உடனடியாக தமிழக அரசு, மத்திய அரசுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றார்.
மக்களை ஏமாற்றும் செயல்..நெடுமாறன்:
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி உண்ணாநிலை போராட்டம் நடத்தியதால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சி நடைபெறுகிறது. உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் மட்டுமே போர் நிறுத்தம் செயëய முன்வந்தனர். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சே அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
நேற்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை சிங்கள ராணுவ விமானங்கள் ஈழத் தமிழர்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும் சிங்கள அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. அங்கு தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உண்மையான முயற்சிகளைச் செய்யாமல் மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications