சென்னையில் பட்டப் பகலில் தொழிலதிபர் படுகொலை
சென்னை: சென்னை கே.கே. நகரில் தொழிலதிபர் ஒருவரை பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சங்கர் (55) சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை விஷயமாக வழக்கறிஞரைப் பார்க்க 3 நண்பர்களுடன் கே.கே.நகர் வந்தார்.
கே.கே.நகர் 92வது தெருவில் உள்ள வழக்கறிஞர் வீட்டிற்கு சென்ற சங்கர் அங்கிருந்து வெளியே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் பட்டா கத்திகளால் சங்கரை சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிரிழந்தார். அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது. சம்பவத்தையடுத்து சங்கரின் நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
போலீசார் சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலையால் கே.கே.நகர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications