பிரபாகரன் இலங்கையை விட்டு இன்னும் தப்பவில்லை - பொகல்லகாமா
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் இலங்கையில்தான் இருக்கிறார். புலிகள் வசம் உள்ள குறுகிய நிலப்பரப்புக்குள்தான் இருக்கிறார். அவரை ராணுவம் நெருங்கி விட்டது. சில நாட்களில் பிரபாகரன் பிடிபடுவார் என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொகல்லகாமா அளித்துள்ள பேட்டியில், பிரபாகரனை ராணுவம் ஏறக்குறைய நெருங்கி விட்டது. விரைவில் பிடிபடுவார் பிரபாகரன்.
அவர் இன்னும் வடக்கில் உள்ள குறுகிய நிலப்பரப்புக்குள்தான் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதேசமயம், பிரபாகரனின் குடும்பத்தினர் மற்றும் அவரது இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
அவருக்கு இனிமேல் இலங்கையில் சுதந்திரமாக செயல்பட முடியாது. அவருக்கு ஒரு வழி மட்டும் வேண்டுமானால் தரலாம். அது அவர் உயிர் பிழைக்க கொடுக்கப்படும் வழியாக மட்டுமே இருக்க முடியும்.
பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் முதலில் இலங்கை சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன் பின்னரே இந்தியாவிடம் ஒப்படைப்பது குறி்து முடிவெடுப்போம் என்றார் அவர்.