தமிழகத்தில் மேலும் 80 பொறியியல் கல்லூரிகள்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 40 கல்லூரிகளும் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 15 கல்லூரிகளும் தொடங்கப்படவுள்ளன. அதே போல கோவை மற்றும் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 25 பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படுகின்றன.
இப்போது இந்த நான்கு பல்கலைக்கழகங்களின் கீழ் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 1.30 லட்சம் இடங்கள் உள்ளன.
புதிதாதத் துவக்கப்படும் கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் 240 இடங்கள் இருக்கும். இதன்மூலம் இந்தக் கல்வியாண்டில் தமிழகத்தில் பி.இ. சீட்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டும். இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மட்டும் 1 லட்சம் இடங்கள் இருக்கும்.
இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 58 இடங்களில் வரும் 6ம் தேதி முதல் பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகாலை 5.30 மணி முதலே பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.