For Daily Alerts
Just In
பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது - இலங்கை பிரதமர்
இதுகுறித்து இன்று அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், 54 வயதாகும் பிரபாகரன் தன்னிடம் உள்ள வீரர்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்.
நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்தான் மிச்சமுள்ள விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். அங்குதான் பிரபாகரனும் இருப்பதாக உறுதியான உளவுத் தகவல் கிடைத்துள்ளது.
விடுதலைப் புலிகளிடம் இன்னும் பெரிய அளவில் ஆயுதங்கள் உள்ளன. அதை வைத்துக் கொண்டு அவர்கள் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. எனவே அவரால் தப்பிச் செல்ல முடியாது என்றார் விக்கிரமநாயகே.
Comments
Story first published: Tuesday, May 5, 2009, 19:01 [IST]