காங். ஆட்சியில் விவசாயம் படுத்துவிட்டது-நல்லகண்ணு

Subscribe to Oneindia Tamil

மானூர்: காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விவசாயிகளை புறக்கணித்துவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நல்லகண்ணுக்கு மானூர் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில்,

மின்சார தட்டுபாட்டால் இன்று தொழில் துறை, விவசாயத்துறை பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயத்துக்கு தேவையான வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்கவில்லை. விவசாயத்துறை புறக்கணிக்கப்பட்டது.

மானூர் பெரியகுளத்தை நம்பி இப்பகுதி விவசாயம் அமைந்துள்ளது. ஆனால் அதற்கு தேவையான நீர்பாசன வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அதிமுக வெற்றி பெற்றால் இப்பகுதியில் உள்ள விவசாய பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

இலங்கை போருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இருப்பதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு நன்றி கூறி இருக்கிறது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் போரை நிறுத்தி விட்டதாக நாடகம் ஆடுகிறார்கள்.

நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதாக அடிக்கல் நாட்டி விட்டு சென்றனர். ஆனால் அந்த இடத்தில் இன்று முட்புதர்கள்தான் மண்டி கிடக்கிறது என்றார் நல்லகண்ணு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+