வாக்காளர்களுக்கு பணம்-அதிமுகவினர் சுற்றிவளைப்பு!
கரூர்: கரூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினரை திமுகவினர் சுற்றி வளைத்துப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய கே.சி. பழனிசாமி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தம்பித்துரை போட்டியிடுகிறார்.
இரு தரப்பும் தேர்தலில் அசுர வேகத்தில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் கரூர் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிரது.
இந் நிலையில் இன்று காலை கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் திரு.வி.க. பழனியப்பன் தலைமையில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த திமுகவினர் ஓடி வந்து அதிமுகவினரை சுற்றி வளைத்ததோடு, வாக்காளர்களுக்கு பணம் கொண்டு வந்த காரையும் பறிமுதல் செய்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காரில் பல லட்ச ரூபாய் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து வெங்கமேடு காவல் நிலையம் முன்பு திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications