ப.சிதம்பரம் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு அடி-உதை!

சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் கண்ணப்பனும், தேமுதிக சார்பில் டாக்டர் ரெஜினா பாப்பாவும் போட்டியிடுகின்றனர்.
ப.சிதம்பரம் காரைக்குடியில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர் சாயல்ராம் என்பவர் மேடையை நோக்கி பாய்ந்தார்.
அவர் ப.சிதம்பரத்திற்கு எதிராகவும், ஈழ தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும் கோஷமிட்டார். மேலும் மேடையில் ஓங்கி அடித்தபடி ஏறவும் முயன்றார்.
இதையடுத்து ஆவேசப்பட்ட காங்கிரசார் சாயல்ராமை அடித்து உதைத்தனர்.
ஆனால் அவரை சாங்கிரசாரிடம் இருந்து போலீசார் சுற்றி வளைத்து காப்பாறி தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனரா என்பதை தெரிவிக்க மறுத்து விட்டனர்.
அப்போது, மேடையில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் தெரிந்தோ, தெரியாமலோ இப்படி செய்துள்ளார். அவரை நான் மன்னித்து விட்டேன் என்று கூறி அவரை போலீசார் அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் போலீசார் தம்மை அடித்து உதைத்து கடுமையான கொடுமைகளை செய்துவிட்டதாக சாயல்ராம் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இப்பிரச்சனையை மனித உரிமை கமிஷன் முன்பு எடுத்துச் செல்ல அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் சில முயன்று வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஒரு பத்திரிக்கையாளர் சிதம்பரம் மீது செருப்பு வீசிய நிலையில் காரைக்குடியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications